Monday, January 15, 2007

சோதனை பதிவு

எங்கும் கவுஜை என்பதே
பேச்சு
கவுஜை என்பதே
எம் உயிர் மூச்சு

உச்சி மீது வான் இடிந்து
வீழுகின்ற போதிலும்
கவுஜை எழுதி
கவுஜை எழுதி
கவி படைப்போம் நாட்டிலே

ஏட்டுக்கவியும்
கூட்டுக்கவியும்
சோத்துக் கவியும்
சொதப்பல் கவியும்

சொந்தமாகக் கவுஜை
செய்து
கவி வளர்ப்போம் நாட்டிலே!!

எல்லாரும் ஓர் குலம்
எல்லாரும் ஓர் இனம்
எல்லாரும் இந்நாட்டு 'கவுஞர்'

கவுஞர்கள் எல்லாரும்
"இன்புற்றிருக்க"
நினைப்பதுவேயல்லாமல்
வேறேதும் அறியோம் பராபரமே!

கவி மடத்துக் கண்மணிகள்

No comments: