Saturday, March 1, 2008

கவிமடம் வழங்கும் விருதுகள்

நெடுநாட்களாகத் தூங்கிக் கிடக்கும் கவுஜைமடத்தைத் தட்டியெழுப்ப வேண்டிய அவசியம் வந்தேவிட்டது ஒரு வகையாக

தமிழ்மணம் விருதுகளை வழங்கபோவதாக அறிவித்து விட்டு வசதியாக மறந்து போனது. சங்கமம் நினவுக்கு வரும்போதெல்லாம் விருதுகள் பற்றி பதிவுகள் இடுகின்றது. ஆனால் எதையும் பேசாமல் எதையும் சொல்லாமல் கவிமடம் மட்டுமே கவுஜைக்கான சிறப்பு விருதைத் தயார் செய்திருக்கிறது.

இந்த ஆண்டு முதல் என்றில்லை - இந்த மாதம் முதல்

திரட்டப்படும் கவுஜைகளை மடம் மிகுந்த கவனத்தோடு ஆராயும்
எந்தக் கவுஜை படிக்கத் துவங்கியதுமே பதற வைத்து ஓட வைக்கிறதோ எந்தக் கவுஜை வாசிக்கத் துவங்கியதும் வாந்தியெடுக்க வைக்கிறதோ அந்தக் கவுஜைக்காக 'சீத்தலைச் சாத்தனார் விருது' வழங்கப்படுமென்ற மகிழ்ச்சிகரமான செய்தியை இங்கே தெரியப்படுத்துகிறோம்.

இதில் மகிழ்ச்சிக்குரிய இன்னொரு விதயமும் இருக்கிறது.
கவுஞர்களை மட்டும் நாம் கௌரவிப்பதாக இல்லை. இது போன்ற கவுஜைகளை தங்கள் இதழகளில் அனுமதித்து கவுஜை வாழ வழிவகுக்கும் ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் 'கவுஜைக் காப்பாளர்'விருது வழங்கலாமென்ற எண்ணம் இருக்கிறது. கவுஜையை வாழ வைக்கும் புண்ணியாத்மாக்களை புறக்கணிக்கலாமா?

இதில் பதிவர்களாகிய உங்களுக்கும் ஒரு கடமை இருக்கிறது நீங்கள் படித்து நொந்து நூடுல்ஸாகி 'என்ன எழவுடா இது?' என்று டவுசரைக் கிழித்துக் கொண்ட கவுஜைகள் இருந்தால் கவிமடத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். சிறந்த கவுஜையைப் பரிந்துரைத்தமைக்காக உங்களுக்கும் 'எட்ட்ப்பனார் விருது' வழங்கலாமென்றிருக்கிறோம். ஆக்வே எல்லோரும் விருது பெற வேண்டுமென்ற உயரிய எண்ணத்துடன் துவங்கப்பட்டிருக்கும் கவுஜை மடத்தின் விருதுகளை ஆதரியுங்கள். அடுத்த வாரத்தில் இவ்வருடத்திற்கான விருதுகள் பட்டியல் அறிவிக்கப்படும்.

கவுஜையே எம் பணி
கதறுவது உங்கள் பிணி