கவிமடத்தின் 'கறுப்பு' தினம்
ஓ!காதலே!!
எனக்கு
வேண்டாம்
காதலர் தினம்.
எனக்கு வேண்டியது
காதலி - நீ
தினம்!
என்ற வகைக் கவுஜைகளை 'ஹோல்சேலாக' உருவாக்க வழிவகுத்ததாலும்,
என்றோ எப்போதோ கிறுக்கிக் கொண்டிருந்தவர்களை, ஒரு தினம் போட்டு கவுஜைத் தீவிரவாதத்துக்கு அடிகோலியதாலும்,
நல்லபடியாக பேசிக்கொண்டிருந்த எம் இளைஞர் குலத்தை வழிதிருப்பி பொறவிக் கவுஜர்கள் ஆக்க வகை செய்ததாலும்,
கவிதைக்குச் சாவுமணிஅடிக்க வந்த காதலர் தினத்தை கவிமடம் துக்க தினமாகக் கொண்டாட முடிவெடுத்திருக்கிறது.
இன்று கவுஜை எழுதிய அத்தனை பேருக்கும் காதலியே மனைவியாக வாழ்த்துகள். (நாங்க மட்டும் என்ன முட்டாளுங்களா? - மனைவி ஆனதும் பாருங்க)
இன்று கவுஜை எழுதாத அத்தனைக் கவுஜர்களுக்கும் கவிமடம் ஆயுட்கால சந்தா இலவசம்.
துக்கத்தைக் கொண்டாட இன்று கவிமடம் கடையடைப்பு செய்கிறது. (இன்று கடையடைப்பு நடந்தாலும் இன்று கவிமடச் சந்தா பிரிவு திறந்தே இருக்கும்)
பி கு: இனிய நண்பர் சாகரனின் வருந்தத்தக்க அகால மரணத்தின் துக்கத்தில் கவிமடமும் பங்கேற்கிறது. துக்கத்தில் கவுஜையாகப் பொங்கிப் போலித்தனக் கவிதைகளைக் கொட்டாமலிருந்த கவிஞர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
நண்பர் சாகரனின் அகால மரணத்தால் இந்தக் கறுப்பு தினத்தில் நடத்தப்படுவதாக இருந்த மாபெரும் கவுஜை போட்டி இன்னும் சில நாட்களுக்குத் தள்ளி வைக்கப்படிருக்கிறது. ஓட்டப் பந்தயத்தில் 'வார்ம்-அப்' செய்வது மாதிரி பொறவிக்கவுஞர்கள் இப்போதே கவுஜ எழுதிப் பழகிக் கொள்ளுங்கள்
கவிமடம்.